புதிய திட்டங்களுடன் ஆரம்பிக்கப்படும் யுக்திய நடவடிக்கை

Nihal Talduwa Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation
By Mayuri Jul 04, 2024 09:03 AM GMT
Mayuri

Mayuri

யுக்திய நடவடிக்கையானது இன்று (04.07.2024) முதல் புதிய திட்டங்களுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுக்திய நடவடிக்கைக்கு இலங்கை இராணுவத்தின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பை சுற்றியுள்ள பகுதிகள்

இன்று கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்களுடன் ஆரம்பிக்கப்படும் யுக்திய நடவடிக்கை | Yukthiya Operation Sri Lanka

மேலும், எதிர்வரும் காலங்களில் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.       

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW