அம்பாறையில் காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன்...
அம்பாறையில் (ampara) இளைஞர் ஒருவர் தனது காதலியை கொலை செய்துவிட்டு தன்னுடய உயிரை தானே எடுத்து உயிரிழந்துள்ளார்.
பதியதலாவ, மரங்கல பகுதியில் வசிக்கும் ஒரு இளம் பெண் ஒருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் காதலனெ, அவரது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும் வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
காதலனின் செயல்
காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர் 23 வயதுடைய சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் கொலையை செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவராகும். சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |