இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளியை பதிவேற்றிய மாவனெல்லை இளைஞர்!

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Prevention of Terrorism Act
By Rakshana MA Jul 09, 2025 04:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கை மாவனெல்லையை சேர்ந்த 21 வயது மாணவரான முகமது ரிஃபாய் முகமது சுஹைல் என்பவர் கடந்த 9 மாதங்களாக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் வெளிநாட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல்: சந்தேகநபர் ஒருவர் மாயம்

திருகோணமலையில் வெளிநாட்டவர்கள் மீது சரமாரித் தாக்குதல்: சந்தேகநபர் ஒருவர் மாயம்

பயங்கரவாத தடைச்சட்டம்

முன்னதாக, 2024 அக்டோபரில் இஸ்ரேலிய தூதரக வளாகத்திற்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளியை பதிவேற்றிய மாவனெல்லை இளைஞர்! | Youth Detained For 9 Months In Srilanka

தமது தேசிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லாத காரணத்துக்காக கைது செய்யப்பட்ட அவர், பின்னர் விடுவிக்கப்பட்டார்.

எனினும், இன்ஸ்டாகிராம் காணொளி தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் அவரின் வழக்கு விசாரணை இன்று இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தரப்பை கோடிட்டு பிபிசி சிங்கள சேவை தகவல் வெளியிட்டுள்ளது.  

எரிபொருள் விநியோகத்தில் எழும் பிரச்சினை

எரிபொருள் விநியோகத்தில் எழும் பிரச்சினை

கரையோர மக்களின் பிரச்சனையை தீர்க்க புதிய திட்டம் முன்னெடுக்கும் ரவூப் ஹக்கீம் எம்.பி!

கரையோர மக்களின் பிரச்சனையை தீர்க்க புதிய திட்டம் முன்னெடுக்கும் ரவூப் ஹக்கீம் எம்.பி!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW