யாழில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Nothern Province
By Aadhithya Jul 06, 2024 01:35 PM GMT
Aadhithya

Aadhithya

யாழ்ப்பாணம் வடமராட்சி இளைஞரொருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், குறித்த சந்தேகநபர் நேற்று (05) அவரது வீட்டில் வைத்து மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைக்திடல் கிராமத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள், மக்களை அச்சுறுத்துதல் உட்பட பல்வேறு சம்பவங்களுடன் சந்தேகநபர் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்

குறித்த இளைஞனுக்கு எதிராக நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் | Youth Arrested With Sword In Jaffna

இந்தநிலையில், சந்தேகநபர் வெவ்வேறு இடங்களில் தலைமறைவாக வசித்துவந்த நிலையில் நேற்று பிற்பகல் தனது தாயார் வீட்டிற்க்கு வந்திறங்கி சில நிமிடங்களில் மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி பொலிஸார் சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்