திருகோணமலையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

Trincomalee Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 27, 2024 10:40 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்கோ பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கைது நடவடிக்கையானது விசேட அதிரடிப்படையினரால் நேற்று (26) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் தனி கட்சியில் களமிறங்கும் நஸீர் அஹமட்..!

பொதுத் தேர்தலில் தனி கட்சியில் களமிறங்கும் நஸீர் அஹமட்..!

மேலதிக விசாரணை

சம்பவத்தில் 29 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது | Youth Arrested With Drugs In Trincomalee

அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 140 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW