மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் யுவதி உயிரிழப்பு

Batticaloa Jaffna Sri Lanka Police Investigation Crime
By Laksi Aug 05, 2024 07:19 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பில் இளம் யுவதியொருவர் காதல் தோல்வி காரணமாக தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணரான லக்சிக்கா (24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி யாழ்ப்பாணத்தைச் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குவைத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

குவைத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

உயிரிழப்பு

இந்தநிலையில், உயிரிந்த பெண் சமூக வலைத்தளங்களில் காதலனின் புகைப்படங்களைப் பகிர்ந்து தான் ஏமாற்றப்பட்டுள்ளதாகக் கூறி, பதிவுகள் வெளியிட்டு வந்துள்ளார்.

மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து இளம் யுவதி உயிரிழப்பு | Young Woman Commits Suicide In Batticaloa

அத்தோடு, குறித்த காதலன் தன்னை ஏமாற்றியதாகப் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து, தனக்கு நீதி கிடைக்காததால் குறித்த யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மேலுமொரு வேட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மேலுமொரு வேட்பாளர்

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு

தபால் மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW