ஹிஜாப் அணியாத பெண்களுக்கு ஈரான் நீதித்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

Iran
By Fathima Apr 01, 2023 07:29 PM GMT
Fathima

Fathima

ஹிஜாப் அணியாத பெண்கள் மீது கருணை இல்லாமல் வழக்கு தொடரப்படும் என ஈரானின் நீதித்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

பெண்கள் நாட்டின் கட்டாய ஆடைக் குறியீட்டை தொடர்ந்து மீறுவதால், ஹிஜாப் இல்லாமல் பொது இடங்களில் தோன்றும் பெண்களுக்கு எதிராக "கருணை இல்லாமல்" வழக்குத் தொடருமாறு ஈரானின் நீதித்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ஹிஜாப் அணியாத பெண்களுக்கு ஈரான் நீதித்துறை விடுத்துள்ள எச்சரிக்கை | Women Without Hijab Prosecuted Without Mercy Iran

ஹிஜாப் "ஈரானிய தேசத்தின் நாகரீக அடித்தளங்களில் ஒன்றாகும்" மற்றும் "இஸ்லாமிய குடியரசின் நடைமுறைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்" என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 

எனவே முரண்பாடான செயல்களைச் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" மற்றும் "இரக்கமின்றி வழக்குத் தொடரப்படுவார்கள்" என்றும் நீதித்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.