யாழில் தீயில் எரிந்து நபரொருவர் உயிரிழப்பு: பெண் கைது

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Death
By Aadhithya Jul 03, 2024 11:45 AM GMT
Aadhithya

Aadhithya

யாழ் (Jaffna) மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து மரணமான சரவணபவானந்தம் சிவகுமாரின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (02) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வத்திராயன் பகுதியில் உள்ள வீட்டில் கடந்த (20) ஆம் திகதி இரவு வேளை தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் ஓலமிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

குறித்த நபர் மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

யாழில் தீயில் எரிந்து நபரொருவர் உயிரிழப்பு: பெண் கைது | Woman Arrested For Person Burnt Murdered Jaffna

இந்த நிலையில், சந்தேகத்தின் பெயரில் பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவிர விசாரணை

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணி பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவருகின்றனர்.

யாழில் தீயில் எரிந்து நபரொருவர் உயிரிழப்பு: பெண் கைது | Woman Arrested For Person Burnt Murdered Jaffna

தீக்காயங்களுக்கு உள்ளான சரவணபவானந்தம் சிவகுமார் 44 வயதுடைய மூன்று பிள்ளைகள் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW