கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது

Bandaranaike International Airport Sri Lanka Crime
By Laksi Sep 28, 2024 04:11 PM GMT
Laksi

Laksi

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (28) கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மில்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அரிசி விலை தொடர்பில் வெளியான தகவல்

அரிசி விலை தொடர்பில் வெளியான தகவல்

மேலதிக விசாரணை

சந்தேகநபர் அபுதாபியிலிருந்து இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது | Woman Arrested At Katunayake Airport

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 11,200 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 56 சிகரட் காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.