பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Mar 22, 2025 03:32 AM GMT
Rukshy

Rukshy

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்பு சந்திவெளி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

மட்டக்களப்பு சந்திவெளி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Weather Changes Expected In The Afternoon

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW