கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Weather
By Mayuri Oct 20, 2024 06:10 AM GMT
Mayuri

Mayuri

மத்திய கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடற்படையினர் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

அறிவிப்பு செல்லுபடியாகும் காலப்பகுதி

இன்று (20) காலை 07 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Weather Alert In Sri Lanka

இதேவேளை, வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW