இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை

Sri Lanka Weather
By Mayuri Oct 11, 2024 03:39 AM GMT
Mayuri

Mayuri

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று (11) முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று 150 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும்.

இரவு வேளையில் அதிக மழை

இலங்கையின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை | Weather Alert In Sri Lanka

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் 40 - 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW