வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல்

Department of Meteorology
By Mayuri Sep 08, 2024 10:52 AM GMT
Mayuri

Mayuri

மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம், சூறாவளியாக மாறி, எதிர்வரும் இரு தினங்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா கடற்கரையை அடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இதன்காரணமாக வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் 70 முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், மழை பெய்யக்கூடிய சாத்தியமும் நிலவுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுறுத்தல் | Weather Alert In Sri Lanka

எனவே, குறித்த கடற்பகுதியில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW