கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானிய கடவுச்சீட்டு அலுவலக அலுவலர்கள் கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தியொன்றினை விடுத்துள்ளனர்.
பிரித்தானிய கடவுச்சீட்டு அலுவலக அலுவலர்கள், ஐந்து வார வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதனை சில மோசடியாளர்கள் தவறாக பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றுவதாகவும் எச்சரித்துள்ளனர்.
மோசடியாளர்களை நம்பி ஏமாறவேண்டாம்
இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி விரைவாக கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்க தங்களை அணுகுமாறு மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும் சில மோசடியாளர்களால் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
The Chartered Trading Standards Institute (CTSI) என்னும் அமைப்பு, மோசடியாளர்களை நம்பி ஏமாறவேண்டாம் என எச்சரித்துள்ளது.
இந்த மோசடிகளிலிருந்து தப்ப, மக்கள் கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதற்காக அரசின் இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.