வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

Climate Change Weather Rain
By Fathima Dec 06, 2025 09:14 AM GMT
Fathima

Fathima

நாட்டின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை இன்று (06) இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை! | Warning Of Severe Lightning Strikes

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னலினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மின்னல் மற்றும் இடி ஏற்படும் சந்தர்ப்பங்களில், திறந்த வெளியிலோ அல்லது மரங்களுக்கு அடியிலோ நிற்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான கட்டடம் அல்லது வாகனத்திற்குள் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.     

FIFA சமாதான விருதின் முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட டிரம்ப்!

FIFA சமாதான விருதின் முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட டிரம்ப்!

லெபனானை ஆக்கிரமிக்க தயாராகி வரும் இஸ்ரேல்...!

லெபனானை ஆக்கிரமிக்க தயாராகி வரும் இஸ்ரேல்...!