வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Fathima Apr 06, 2023 11:38 PM GMT
Fathima

Fathima

பண்டிகை காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விசேட நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பரிசோதிப்பதற்கான சுவாச பரிசோதனை கருவிகள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். 

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை | Warning For Drivers From Police

இன்று (07) அனைத்து பிரதேசங்களுக்கும் 1,67,000 சுவாச பரிசோதனை கருவி (ப்ரீத் அனலைசர்)களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த பண்டிகைக் காலத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் வகையில் நாடு முழுவதும் பல சாலைத் தடுப்புகள் அமைக்கப்படும், எனவும், இந்த காலப்பகுதியில் பொலிஸார் இரவு பகலாக நடமாடும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவதோடு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோதனைச் சாவடிகளையும் அமைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.