இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர்கள் கைது!

Batticaloa S. Viyalendiran Crime
By Laksi Aug 01, 2024 11:47 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இன்று (01) மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆற்று மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக சிங்களவர் ஒருவரிடமிருந்து 15 இலட்சம் ரூபாவினை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மைத்திரிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு

மைத்திரிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு

கைது 

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் செயலாளர்கள் கைது! | Viyalendiran Two Secretaries Arrested For Bribed

இதேவேளை கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் இராஜாங்க அமைச்சரின் இணைப்பதிகாரியாக இருந்த ஒருவரும் அவரின் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது

அநுராதபுரத்தில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் கைது

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW