ஊழல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அநுரவுக்கு கிடைத்த வெற்றியே! பிமல் ரத்நாயக்க

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka President of Sri lanka Bimal Rathnayake Parliament Election 2024
By Rukshy Oct 12, 2024 09:59 AM GMT
Rukshy

Rukshy

ஊழல் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானதற்கு கிடைத்த வெற்றி என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தோல்வியிலிருந்து தப்புவதற்காக ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துக் கொண்டுள்ளனர்.

தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர்

அடுத்த தேர்தலில் அவ்வாறான அரசியல்வாதிகள் வேட்பாளர்களாக நிற்காத நிலையை ஏற்படுத்தியமை பொதுத்தேர்தலிற்கு முன்னர் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெருவெற்றி என ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊழல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது அநுரவுக்கு கிடைத்த வெற்றியே! பிமல் ரத்நாயக்க | Victory Anura Corrupt Politicians Away Politic

அநுரகுமாரவை ஜனாதிபதியாக தெரிவு செய்யதமைக்காக மக்களிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

இது இறுதியில் ஊழல் இனவாத அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையை முடித்துவைத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமாரவிற்கு வாக்களித்தன் மூலம் மக்கள் சிறந்த செயலை செய்தனர் இது இறுதியில் ஊழல் அரசியல்வாதிகளை அகற்றியது.

இந்நிலையில், தோல்வியை தவிர்ப்பதற்காக இந்த அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்துள்ளனர் எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.