கால்நடை மருத்துவர்கள் அடையாள வேலைநிறுத்தம்
கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர்களுக்கான தனி சேவையொன்றை ஆரம்பிக்ககும் அரசாங்கத்தின் முயற்சியைத் தடுக்கும் வகையில் நடைபெறும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் வைத்தியர் உப்புல் ரஞ்சித் குமார தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
அரசு கால்நடை அலுவலகங்க
இதன் விளைவாக அனைத்து அரசு கால்நடை அலுவலகங்களின் செயல்பாடுகளும் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தேசிய விலங்கியல் பூங்காக்கள், வனவிலங்கு பாதுகாப்புத் துறை, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் உள்ள விலங்குகளுக்கான தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்க நிறுவனங்களில் கால்நடை மருத்துவர்களால் வழங்கப்படும் சேவைகளும் பாதிக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |