கொழும்பில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்: விசாரணைகள் தீவிரம்

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Sep 07, 2024 12:50 PM GMT
Laksi

Laksi

பாதுக்க- மஹிங்கல பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வான், கெப் மற்றும் முச்சக்கரவண்டி ஆகிய 3 வாகனங்களே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரணை நகரசபை தீயணைப்பு பிரிவினரால் குறித்த தீயை அணைக்க முயற்சித்தபோது, அதற்குள் மூன்று வாகனங்களும் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை

சம்மாந்துறையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை

மேலதிக விசாரணை

இதனையடுத்து, இந்த வீட்டை சுற்றியுள்ள காணி பகுதிக்குள் வெளிநபர்கள் எவரும் நுழைய முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் திடீரென தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்: விசாரணைகள் தீவிரம் | Vehicles Caught Fire Suddenly Police Investigation

அத்துடன், இந்த மூன்று வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ,இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு கணினி அவசர செயற்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..!

நாட்டு மக்களுக்கு கணினி அவசர செயற்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..!

அம்பாறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

அம்பாறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW