சடுதியாக அதிகரித்துள்ள மரக்கறி விலை..!
சிங்கள - தமிழ் புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு விநியோகம் இல்லாததால், நாட்டில் தற்போது காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முருங்கைக்காய் ஒரு கிலோகிராம் 2000 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு கிலோகிராம் 450 ரூபாவிற்கும், தக்காளிப்பழம் ஒரு கிலோகிராம் 600 ரூபாவிற்கும், பீற்றூட் ஒரு கிலோகிராம் 300 ரூபாவிற்கும் நேற்று (13) வடமராட்சி சந்தைகளில் விற்பனையாகியுள்ளன.
பொருட்களின் விலை
இந்நிலையில், நேற்றைய தினம் (13) புத்தாண்டு சந்தை பருத்தித்துறை, நெல்லியடி, மந்திகை நகர்ப் பகுதியில் கடந்த வருடங்கள் போல் அல்லாது மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளன.
இதற்கு பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |