மின்கம்பத்தில் மோதிய வாகனம்! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதி
Sri Lankan Peoples
Eastern Province
Accident
By Rakshana MA
வவுனியாவிலிருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம், திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியின் வெல்வேரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தானது, இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளது.
பாதையை விட்டு விலகிய வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதால், சம்பவ இடத்தில் மின்கம்பமும் பலமாக சேதமடைந்துள்ளது.
விபத்து சம்பவம்
விபத்துச் சமயத்தில் வாகனத்தில் இருந்த சாரதி சிறு காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |