வாழைச்சேனையில் பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் கைது

Batticaloa Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Eastern Province Drugs
By Rakshana MA Jun 25, 2025 06:02 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்து கைது நடவடிக்கையானது, நேற்று (24) முன்னெடுக்கப்ட்டுள்ளது.

மேலும், இதில் ஒரு பெண்ணும் அடங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவார்களிடமிருந்து 13 இலட்சம் ரூபா பணம், கெரோயின் - 5கிராம் 750 மில்லி கிராம், 5கிராம் 670 மில்லி கிராம் ஜஸ் போதைப் பொருள் மற்றும் கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவி என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

நிந்தவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் இளம்பெண்! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்

நிந்தவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் இளம்பெண்! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்

போதைப்பொருள் வியாபாரம் 

பெண் வியாபாரி 40 வயதுடையவர் என்றும் அவர் நீண்டகாலமாக வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பகுதியில் குறித்த வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், முன்னர் கைது செய்யப்பட்டு நீதி மன்ற நடவடிக்கையின் பின்னர் விடுதலையாகியிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், அவர் தனது வியாபர நடவடிக்கையினை பொலன்னறுவை வீதி நாவலடி பகுதிக்கு இடம்மாற்றி மேற்கொண்டு வந்த நிலையில் பொதுமக்களால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அவர் அதே இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனையில் பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் கைது | Valaichenai Drug Dealers Arrested

இதேபோன்று மற்றைய நபர் மாவடிச்சேனை வாழைச்சேனையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களை வாடகைக்கு வழங்கி பணம் சம்பாதிக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததோடு போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கைது நடவடிக்கையானது வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.ஆர்.பண்டார ஆலோசனையின் பேரில் ஊழல் ஒளிப்பு அதிகாரி கே.எஸ்.பி.அசங்க தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

குச்சவெளிப் பிரதேச சபையை கைப்பற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

குச்சவெளிப் பிரதேச சபையை கைப்பற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

போதைக்கு அடிமையான பகுதியினர்

வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பகுதியில் நீண்டகாலமாக போதைப் பொருள் வியாபராத்தில் ஈடுபட்டு வந்த இவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பல்வேறு ஆர்பாட்டங்களை நடாத்தி வந்திருந்தனர்.

வாழைச்சேனையில் பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் கைது | Valaichenai Drug Dealers Arrested

குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையால் பல்வேறு கொலை சம்பவங்கள் இடம்பெற்றதுடன் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக பிரதேச மக்கள் கவலையடைந்துள்ளனர்.   

ஆனால் பொலிஸார் இவர்களை கைது செய்வதில் இழுத்தடிப்பு செய்து வந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் மீது உளவியல் நெருக்கடிகளை கட்டவிழ்க்கும் மொசாட்..!

ஈரானின் மீது உளவியல் நெருக்கடிகளை கட்டவிழ்க்கும் மொசாட்..!

ஈரான் அரசினால் வெளியிடப்பட்ட கடுமையான எச்சரிக்கை

ஈரான் அரசினால் வெளியிடப்பட்ட கடுமையான எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW