தேர்தல் பிரசாரங்களுக்கு அரச செலவில் உலங்கு வானூர்தி பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

By Mayuri Aug 26, 2024 08:42 AM GMT
Mayuri

Mayuri

தேர்தல் கூட்டங்கள் மற்றும் பிரசார நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அரச செலவில் உலங்கு வானூர்திகளை பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசுக்கு சொந்தமான உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படுமாயின் அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாருக்கு தடை இல்லை?

எனினும் தேர்தல் கடமைகள் அல்லாத வேறு நடவடிக்கைகளுக்காக அரசின் உலங்கு வானூர்திகளைப் பெற்றுக் கொள்வோருக்கு எவ்வித தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரங்களுக்கு அரச செலவில் உலங்கு வானூர்தி பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு | Use Of Ulangu Aircraft At Government Expense

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW