போலி அழகுசாதனப் பொருட்கள் குறித்து எச்சரிக்கை

GMOA Sri Lanka Beauty
By Kamal Jun 11, 2024 12:45 AM GMT
Kamal

Kamal

நாட்டில் போலி அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சட்டவிரோதமான அழகுசாதன பொருட்கள், கிறீம் வகைகள் போன்ற எவ்வித தர நிர்ணயங்களுக்கும் உட்படுத்தப்படாது சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போலி அழகுசாதனப் பொருட்கள் குறித்து எச்சரிக்கை | Unhealthy Creams Warnings

இந்த நிலைமையானது பாரிய சுகாதார பிரச்சினைகளை உருவாக:கும் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பயன்பாட்டில் காணப்படும் அழகுசாதன கிறீம் வகைகளின் இரசாயன கலவை குறித்து பரிசோதனை செய்வதற்கு போதியளவு ஆய்வு கூடங்கள் இல்லாமை பாரிய பிரச்சினை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போதியளவு ஆய்வுகூட வசதியில்லை

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையிடம் போதியளவு ஆய்வுகூட வசதிகள் கிடையாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும், இந்த கிறீம் வகைகளை பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடிய உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வுகூடங்களை பயன்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.