இலங்கையில் முஸ்லிம் பெண்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐ.நா கவலை

United Nations Sri Lanka
By Fathima Mar 25, 2023 06:48 PM GMT
Fathima

Fathima

ஐ.நா மனித உரிமைகள் குழு, அடிப்படை சட்டப் பாதுகாப்புகள் இல்லாமல், நிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் பெண்கள் உட்பட தன்னிச்சையான கைதுகள் பற்றிய அறிக்கைகள் குறித்து கவலை எழுப்பியுள்ளது.

இந்த குழு, எகிப்து, பனாமா, பெரு, இலங்கை, துர்க்மெனிஸ்தான் மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகளின் சமீபத்திய சம்பவங்களை ஆய்வு செய்த பின்னர் அதன் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. 

இலங்கையில் முஸ்லிம் பெண்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஐ.நா கவலை | Un Concerned Over Arrest Muslim Women In Sri Lanka

மேலும், இலங்கையில், அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள், தொழிற்சங்கவாதிகள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல் என்பன குறித்து  அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.