விமானத்தில் பலியான குடும்பங்களை கவனத்தில் கொள்ளாத அரசாங்கம்..! குற்றம் சாட்டும் குடும்பத்தினர்

India Flight World Air India
By Rakshana MA Jun 17, 2025 07:30 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்களின் குடும்பத்தினர், பிரித்தானிய அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த வியாழக்கிழமை இந்தியாவில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்களில் அகீல் நானாபாவா, ஹன்னா வோராஜி மற்றும் மற்றும் தம்பதியரின் நான்கு வயது மகளான சாரா நானாபாவா ஆகியோறும் அடங்குவர்.

இலங்கையில் எரிபொருள் விலை உயரக்கூடிய சாத்தியம்..!

இலங்கையில் எரிபொருள் விலை உயரக்கூடிய சாத்தியம்..!

குடும்பத்தினர் கோரிக்கை

இந்தியா சென்றுவிட்டு Gloucester இலுள்ள தங்கள் வீட்டுக்கு புறப்பட்டபோது அவர்கள் பயணித்த விமானம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் பலியான குடும்பங்களை கவனத்தில் கொள்ளாத அரசாங்கம்..! குற்றம் சாட்டும் குடும்பத்தினர் | Uk Families Slam Govt On Ai Crash

இந்நிலையில், அகீலின் சகோதரர் ஹம்சா, தாங்கள் DNA பரிசோதனைக்காக மாதிரிகள் கொடுத்து மூன்று நாட்கள் ஆகியும் தங்கள் குடும்பத்தினரின் உடல்கள் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அவரது குடும்ப செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, நாங்கள் அற்புதங்களை கேட்கவில்லை, நாங்கள் பிரித்தானிய அரசு எங்களுக்காக இரக்கம் காட்டவேண்டும், நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுதான் கேட்கிறோம்.

கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு

கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு

அரசாங்கத்தின் நடவடிக்கை

உண்மையில், நாங்கள் முற்றிலும் கைவிடப்பட்டதாக உணர்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரித்தானிய அரசு அங்கிருந்துகொண்டு பெரிய உரையாற்றிக்கொண்டிருக்கிறது.

விமானத்தில் பலியான குடும்பங்களை கவனத்தில் கொள்ளாத அரசாங்கம்..! குற்றம் சாட்டும் குடும்பத்தினர் | Uk Families Slam Govt On Ai Crash

சும்மா பேசிக்கொண்டிருக்காமல் இங்கே வந்து உதவுங்கள் என்று அகீல் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் குடிமக்கள் உயிரிழந்த நிலையிலும், அன்பிற்குரியவர்களை இழந்து வேதனையில் இருக்கும் குடும்பத்தினரை இதுவரை பிரித்தானிய அரசு சார்பில் யாரும் தொடர்பு கொள்ளக்கூட இல்லை என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலையில் 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு

தென்கிழக்குப் பல்கலையில் 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு

விளையாட்டுகளில் ஊக்கமருந்துக்கு எதிரான விவாதம் இன்று!

விளையாட்டுகளில் ஊக்கமருந்துக்கு எதிரான விவாதம் இன்று!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW