தென்கிழக்குப் பல்கலையில் 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு

By Rakshana MA Jun 17, 2025 05:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்தியாவின் தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களமும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடமும் இணைந்து, 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த மாநாடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம்.முஸ்தபாவின் நெறிப்படுத்தலில் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட கேட்ப்போர் கூடத்தில் நேற்று(16) இடம்பெற்றது.

விளையாட்டுகளில் ஊக்கமருந்துக்கு எதிரான விவாதம் இன்று!

விளையாட்டுகளில் ஊக்கமருந்துக்கு எதிரான விவாதம் இன்று!

ஆய்வு மாநாடு

“முன்னேற்றம் பெற்றுள்ள இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தொழில் முனைவோர் செயற்பாடுகள், கலாசாரம், புதுமை, ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலமாக சமூக மாற்றமும் பொருளாதார மேம்பாடும்” (Social Transformation and Economic Upliftment through Entrepreneurship, Culture, Innovation, and Export Promotion in the Digital Era (ICEIEDE–2025)) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற ஆய்வு மாநாட்டில் ஆரம்ப நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.ஜுனைடீன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

தென்கிழக்குப் பல்கலையில் 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு | 8Th Int L Research Meet At Seusl

இந்த நிகழ்வின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டுக் குழுவின் செயலாளரும் இந்தியாவின் தமிழ்நாடு சேலத்திலுள்ள பெரியார் அரசு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் திணைக்களத்தின் பேராசிரியருமான கலாநிதி வி.ஆர் பழனிவேலு சிறப்பு உரையாற்றினார்.

இந்தியாவின் தமிழ்நாடு சேலம், காக்காப்பாளையம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆசோசியேட் பேராசிரியர் கலாநிதி ஆர்.ரமேஷ், ஆய்வரங்கு தொடர்பான அவதான உரையை ஆற்றினார்.

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

விசேட நிகழ்வுகள்

ஆய்வரங்கின் பிரதான உரையை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால் நிகழ்த்தினார். அத்துடன் நன்றியுரை பேராசிரியர் கலாநிதி சல்பியா உம்மாவால் நிகழ்த்தப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலையில் 8 ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு | 8Th Int L Research Meet At Seusl

இந்த நிகழ்வுக்கு இந்தியாவிலிருந்து கலாநிதி வி.ஆர் பழனிவேலு, கலாநிதி டி. ஸ்ரீவித்யா, கலாநிதி எஸ். நந்தினி, சேலம் ஜிஹான் டிராவல்ஸின் முகாமைத்துவ பணிப்பாளர் விஷ்ணு மனோஜ், வி.பி. கவுரந்த், பி. கவினா, கே.எஸ். சௌந்தர்யா, எல். மொனிஷா, கலாநிதி ஆர். இரமேஷ், கலாநிதி கே. மணிமேகலை, எஸ்.பி. ஸ்ரீவித்யா, என்.எஸ். பிரகாஷ், தி விஜயலட்சுமி பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் வருகைதந்து கலந்துகொண்டனர். நிகழ்வின்போது கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில், தொழிநுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன. 

ஓட்டமாவடி பிரதேச சபை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம்

ஓட்டமாவடி பிரதேச சபை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம்

உலகையே ஆச்சரியப்படுத்த தயாராகும் ஈரான் : வெளியான காணொளி

உலகையே ஆச்சரியப்படுத்த தயாராகும் ஈரான் : வெளியான காணொளி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW