இலங்கை மக்களுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் வெளியிட்ட இரங்கல்
Kandy
Landslide
By Fathima
கடுகண்ணாவ பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் இரங்கல் வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று இடம்பெற்ற இந்த மண்சரிவு அனர்த்தத்தில் ஆறு பேர் உயிரிழந்ததுடன் நான்கு பேர் படுகாயம் அடைந்திருந்தனர்.
இரங்கல்
இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாக ஐக்கிய அரபு இராச்சிய வெளிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பில் இலங்கை அரசு மற்றும் இலங்கை மக்களுக்கு ஆறுதல்களை வெளிப்படுத்துவதாக ஐக்கிய அரபு இராச்சிய வெளிவகார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.