சந்தேக நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இரு பொலிஸார் பணி இடைநிறுத்தம்

Jaffna Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 29, 2024 06:00 AM GMT
Laksi

Laksi

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலையக்குற்றத் தடுப்புப் பிரிவில் பணிபுரியும் இரண்டு பொலிஸார் சந்தேக நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில்  பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்குதல் மேற்கொண்டதில்  சந்தேக நபர் பருத்தித்துறை வைத்தியசாலையின் இலக்கம் 07 இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், தாக்குதல் தொடர்பில் பருத்தித்துறை குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குடிபோதையில் இருந்தமை உறுதி செய்யப்பட்ட பின்னர், அவர் கைது செய்யப்பட்டார்.

ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

பணி இடைநிறுத்தம்

இதனையடுத்து, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நீதிமன்றில் முற்படுத்தியபோது, இருவரும் 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரைத் தாக்கிய குற்றச்சாட்டில் இரு பொலிஸார் பணி இடைநிறுத்தம் | Two Policemen Suspended For Assaulting Suspect

மேலும், இரு பொலிஸாரும் காங்ககேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணை முடியும் வரை பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாக இழுபறி

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாக இழுபறி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW