ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka Police Galle Sri Lanka Police Investigation
By Dhayani Jul 29, 2024 02:39 AM GMT
Dhayani

Dhayani

காலி, ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கும்புர வீதியின் ஹருமல்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு  (28 ஆம் திகதி) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் கைத்துப்பாக்கியால் இருவரை சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்ததுடன், மற்றவர் முச்சக்கரவண்டியில் ஏற முற்பட்ட போது, ​​துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் முச்சக்கரவண்டி மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இன்றைய நாளுக்கான காலநிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

இன்றைய நாளுக்கான காலநிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

ஹபராதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி | Habaradu Shooting 2 In Hospital

பொலிஸார் விசாரணை

இதனால் முச்சக்கரவண்டியின் சாரதியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 34 மற்றும் 54 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் ஹபராதுவ மற்றும் லக்ககஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW