யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Aug 13, 2024 10:25 PM GMT
Harrish

Harrish

யாழ்.தென்மராட்சி - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களுடன்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த  கைது நடவடிக்கை கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று(13.08.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கும் இரண்டு நாமல் ராஜபக்சர்கள்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கும் இரண்டு நாமல் ராஜபக்சர்கள்

கைது நடவடிக்கை

இதன்போது, கிளாலி பகுதியிலிருந்து நேற்று(13) அதிகாலை 4.30 மணியளவில் கொடிகாமம் நோக்கி சட்டவிரோத மணலுடன் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனங்களே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது | Two Persons Arrested Illegally Transporting Soil

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நேற்றையதினம்(13) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தை விட்டு அதிகளவான மக்கள் வெளியேற்றம்

நியூசிலாந்தை விட்டு அதிகளவான மக்கள் வெளியேற்றம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW