உத்தரவை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி

By Fathima Apr 23, 2024 02:52 AM GMT
Fathima

Fathima

களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்றிரவு மொரகஹஹேன டயர் தொழிற்சாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி

மொரகஹஹேன பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரவை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு - இருவர் பலி | Two Killed In Police Shooting In Kalutara

இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தின் போது முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொரு நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.