முல்லைத்தீவில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான இருவர் படுகாயம்

Mullaitivu Sri Lanka Sri Lanka Police Investigation
By Harrish Jul 02, 2024 09:25 AM GMT
Harrish

Harrish

முல்லைத்தீவில் (Mullaitivu) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் இன்று (02.07.2024) மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் இன்று(07) அதிகாலை 3 மணி அளவில் வாள்களுடன் இரண்டு வீடுகளுக்கு சென்ற குழுவினர் குறித்த வீட்டில் இருந்த இருவர் மீது வாள் வெட்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான இருவர் படுகாயம் | Two Injured Sword Attack In Mullaitivu

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த இருவரும் மல்லாவி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW