திருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்! 17பேர் வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka Police
Trincomalee
By Fathima
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுங்கு கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது.
இம்மோதலில் காயமடைந்த 17 பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து தம்பலகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.