ஆன்மீக ஒழக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முக்கிய கலந்துரையாடல்
ஆன்மீக ஒழக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவது குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
அதன்படி, ஆன்மீக ஒழுக்கமுள்ள ஆரோக்கியமான கல்வி சமூகம் எனும் இலக்கை நோக்கிய பயணத்தில் சமூக நிறுவனங்களின் பொறுப்புகளும் எதிர்கால செயற்பாடுகளும் எவ்வாறு அமைய வேண்டும்" எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, உலமா சபை, பள்ளிவாயல்கள் சம்மேளனம், சூரா சபை, பள்ளிவாயல் நிர்வாகிகள் ஆகியோருடன் நேற்று (13) கிண்ணியா மஸ்ஜிதுல் ஹைர் ஜூம்ஆ பள்ளிவாயலில் கலந்துரையாடல் நடைபெற்றது.
முன்வைக்கப்பட்ட செயல்திட்டங்கள்
பள்ளிவாயல் நிர்வாகங்கள் ஒவ்வொரு மகல்லாவிலும் எவ்வாறு எமது எதிர்கால நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது என்றும் பள்ளி நிர்வாகிகங்களின் நிர்வாக அதிகாரத்தை எவ்வாறு பலப்படுத்துவது என்றும் செயல்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
இதில் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தி, உலமா சபை, சூரா சபை உட்பட சமூக நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


