திருகோணமலையில் பிடியளவு கமநிலத்திற்கு என்ற தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Jun 11, 2025 12:00 PM GMT
Rakshana MA

Rakshana MA

"பிடியளவு கமநிலத்திற்கு” எனும் தொனிப்பொருளின் கீழ் உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு பயிரிடப்படாத, சகல கமத்தொழில் காணிகளையும் வினைத்திறனாகப் பயிர்செய்கையில் ஈடுபடுத்தல் எனும் தேசிய வேலைத்திட்டம் திருகோணமலை - சேருநுவர பிரதேசத்திலும் இன்று (11) இடம்பெற்றுள்ளது.

சேருநுவர கமநல சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.நௌபர் தலைமையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

அம்பாறையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள்

அம்பாறையில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகள்

தேசிய வேலைத்திட்டம் 

இதன்போது "பிடியளவு கமநலத்திற்கு" வேலைத்திட்டத்தில், பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மேட்டுநில காணிகளில் விவசாயிகள் நடுவதற்கு முன்வந்த மரக்கன்றுகள் நடப்பட்டன.

திருகோணமலையில் பிடியளவு கமநிலத்திற்கு என்ற தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் | Trincomalee Agriculture Project 2025

அத்தோடு, பயிரிடப்படாதுள்ள நிலங்களை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்தல் தொடர்பாக பிரதேச விவசாயிகளுக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

இத் தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் சேருநுவர பிரதேச சபை உறுப்பினர் சம்பத், சேருநுவர பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் குணசீலன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சுஜாத், சேருநுவர வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கமநல சேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் உள்ள யூத வழிபாட்டு தலங்களுக்கு கடும் பாதுகாப்பு

இலங்கையில் உள்ள யூத வழிபாட்டு தலங்களுக்கு கடும் பாதுகாப்பு

அடுத்த 24 மணிநேரத்தில் காற்றின் தரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

அடுத்த 24 மணிநேரத்தில் காற்றின் தரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW