அடுத்த 24 மணிநேரத்தில் காற்றின் தரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண் 38 தொடக்கம் 68 க்கு இடையில் காணப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளது.
மேலும் இதில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் எனவும் கணித்துள்ளது.
காற்றின் தரம்
குறித்த அந்த அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரச் சுட்டெண் மிதமான அளவிலும், கொழும்பு 07, யாழ்ப்பாணம், கேகாலை, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் நல்ல நிலையிலும் காணப்பட்டது.
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண் 38 தொடக்கம் 68 க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலான பகுதிகளில் மிதமான அளவைக் குறிக்கிறது.
அதேவேளையில் கொழும்பு 07, யாழ்ப்பாணம், வவுனியா, கேகாலை, நுவரெலியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் ஆரோக்கியமான நிலையில் காணப்படும்.
ஆரோக்கியமற்ற காற்று
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும்.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |