பயணி மீது கொடூர தாக்குதல்! பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் கைது

Sri Lanka Police Kalutara Sri Lanka Police Investigation
By Fathima Apr 26, 2023 06:48 PM GMT
Fathima

Fathima

தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

களுத்துறை - பண்டாரகம  தனியார் பேருந்தொன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பயணி மீது கொடூர தாக்குதல்! பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் கைது | Traveling By Bus In Sri Lanka

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் அடிப்படையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநரை பண்டாரகம பொலிஸார் நேற்று (25) கைது செய்துள்ளனர்.  

பண்டாரகம - கோனதூவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   

உரிய இடத்துக்கு முன்னதாகவே பயணிகளை இறக்கிவிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக, குறித்த பயணிமீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.