45 நிமிடங்களாக வீதியை மறித்து நின்ற தொடருந்து: மக்கள் பெரும் அசௌகரியம்
Batticaloa
Sri Lankan Peoples
Petrol diesel price
By Fathima
மட்டக்களப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வீதிக்கடவையை மறித்து எரிபொருள் நிரப்புவதற்காக சுமார் 45 நிமிடம் தொடருந்து நின்றுள்ளதாக தெரியவருகிறது.
இன்று காலை 10 மணி முதல் 10.45 மணி வரை தொடருந்து இவ்வாறு வீதியை மறித்து நின்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக தொடருந்து கடவை ஊடாக பயணிக்கும் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு உட்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

