நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Weather Rain
By Faarika Faizal Oct 21, 2025 06:29 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

சவுதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

பலத்த காற்று மற்றும் மின்னல் 

மேலும், இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Weather Report

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அந்நிலையில், இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. பிற்பகல் 1 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

இலங்கையில் பலவீனமான எதிர்க்கட்சிகள்! ஏற்றுக்கொள்ளும் ரணில்

இலங்கையில் பலவீனமான எதிர்க்கட்சிகள்! ஏற்றுக்கொள்ளும் ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW