அதிகரிக்கவுள்ள மழை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Feb 24, 2025 03:01 AM GMT
Rakshana MA

Rakshana MA

அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய நாளுக்கான (24) வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகளுக்கான தட்டுப்பாடு! வெளியான தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகளுக்கான தட்டுப்பாடு! வெளியான தகவல்

வானிலை மாற்றம் 

இந்த நிலையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகரிக்கவுள்ள மழை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Sri Lanka Weather Update

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மட்டக்களப்பில் குழந்தை பெற்று யன்னலால் வீசிய மாணவி

மட்டக்களப்பில் குழந்தை பெற்று யன்னலால் வீசிய மாணவி

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் வெளியான தகவல்கள்

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் வெளியான தகவல்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW