வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA May 10, 2025 02:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் சில பகுதிகளில் இன்று (10) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

அதன்படி, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கிண்ணியா நகர சபை

தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் கிண்ணியா நகர சபை

வானிலை மாற்றம்

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மேல் மாகாணத்திலும், புத்தளம், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வானிலை தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Today Climate Change In Sri Lanka

அதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

ஆகவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அமெரிக்க போர் விமானத்தை தாக்கிய ஏமன் ஹவுதிக்கள்

அமெரிக்க போர் விமானத்தை தாக்கிய ஏமன் ஹவுதிக்கள்

அமெரிக்க டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அமெரிக்க டொலர் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW