நாட்டின் பல மாகாணங்களில் இன்று மாலை ஏற்படவுள்ள மாற்றம்

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA May 06, 2025 03:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் பல மாகாணங்களில் மாலையில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய(06) வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பலத்த மின்னல் பற்றிய அறிவிப்பு

பலத்த மின்னல் பற்றிய அறிவிப்பு

வானிலை மாற்றம்

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் பல மாகாணங்களில் இன்று மாலை ஏற்படவுள்ள மாற்றம் | Today Climate Change In Sri Lanka

அதேவேளை, மாலை அல்லது இரவில் தீவின் ஏனைய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் என கூறியுள்ளது.

இறக்காமம் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் மரணம்

இறக்காமம் சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் மரணம்

எச்சரிக்கை 

அதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் பல மாகாணங்களில் இன்று மாலை ஏற்படவுள்ள மாற்றம் | Today Climate Change In Sri Lanka

ஆகவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடவுச்சீட்டு சேவை தொடர்பில் வெளியான அறிவித்தல்

கடவுச்சீட்டு சேவை தொடர்பில் வெளியான அறிவித்தல்

எதிர்வரும் 6ஆம் திகதி விடுமுறை! வெளியான அறிவிப்பு

எதிர்வரும் 6ஆம் திகதி விடுமுறை! வெளியான அறிவிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW