மட்டக்களப்பில் வீதியில் மீட்கப்பட்ட சடலம்
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை சந்திக்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், குறித்த சடலமானது, நேற்றைய தினம் (28) காலை மீட்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சடலமாக மீட்கப்பட்ட நபர் அம்பிளாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான தியாகராசா சுகிதரன் (வயது – 38) என்பவர் ஆவார் என தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சடலம்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (27) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் நேற்று (28) காலையில் திக்கோடை சந்திக்கு அருகாமையிலுள்ள வீதியில் மதகு ஒன்றிற்று அருகில் கீழே விழுந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வீதியில் இவ்வாறு சடலம் காணப்பட்டதை தொடர்ந்து அவ்வீதியால் பயணித்த பொதுமக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதேவேளை, வெல்லாவெளி பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |