அதிபர்களுக்கு கல்வி அமைச்சகம் விடுத்துள்ள அறிவித்தல்
Ministry of Education
Harini Amarasuriya
Sri Lankan Schools
By Rakshana MA
அண்மைக்காலமாக பாடசாலைகளில் இடம்பெறும் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தினை கல்வி, உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு மாவட்ட அதிபர்களை தெளிவூட்டும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகளில் பிள்ளைகள் துன்புறுத்தப்படுவதனை அனுமதிக்க முடியாது.
அத்தோடு பாடசாலைகளில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அதிபர்கள் துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |