மூதூருக்கு வருகை தந்த லண்டன் நகர சபை உறுப்பினர்
திருகோணமலை பெண் ஆளுமை செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மூதூர் - கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்று செவ்வாய்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது.
மூதூர் சுழலும் சக்கர நற்பணிமன்றம், மூதூர் - சிறி நாராயணபுரம் மாதர் சங்கங்களின் தலைவி மகேந்திரன் சுகிர்தப்பிரியா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
கெரவிப்பு..
இதன்போது திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 60 பெண் ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டதுடன், கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் முதன்மை அதிதிகளா இங்கிலாந்து -ஹாரோ நகர முன்னாள் நகரபிதாவும் ஹாரோ நகரின் தற்போதைய நகர சபை உறுப்பினருமான பாபா சுரேஷ் கிறிஷ்ணா மற்றும் அவரது துணைவியும் முன்னாள் ஹாரோ நகர துணை நகர பிதாவுமான சசிகலா சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









