அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான தகவல்

Government Employee Sri Lanka Sri Lankan Peoples Nalinda Jayatissa
By Rakshana MA May 27, 2025 11:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

அரச சேவையில் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (27) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவில் மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவில் மாற்றம்

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு

அதன்படி அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு வெளியான தகவல் | Sri Lanka Government Job Vacancy

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 04 மாகாண சபைகள் மற்றும் 02 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   

இம்முறை இலவசமாக ஹஜ் செய்யவுள்ள 20 கிழக்கிலங்கை மக்கள்..!

இம்முறை இலவசமாக ஹஜ் செய்யவுள்ள 20 கிழக்கிலங்கை மக்கள்..!

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW