திருகோணமலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டுப்பிரசுரம்

Tamils Trincomalee Selvarajah Kajendren Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 26, 2024 05:10 AM GMT
Laksi

Laksi

திருகோணமலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த துண்டுப்பிரசுரங்கள் நேற்று (25) திருகோணமலை பெரியகடை வீதியில் ஆரம்பித்து சிவன் கோயிலுக்கு முன்னால் வரையான வீதி வரை விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் மாவட்ட செயலாளர் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டு மக்களுக்கு வீதி வழியாக துண்டுப்பிரசுரங்களை வழங்கி வைத்தனர்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு பாதாளத்துக்கு சென்றது: ரிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாடு பாதாளத்துக்கு சென்றது: ரிசாட் பதியுதீன் குற்றச்சாட்டு

ஜனாதிபதி தேர்தல்

இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குறித்த கட்சியின் மாவட்ட செயலாளர் சிறீபிரசாந், தமிழ் மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் பொது வேட்பாளர் என்பது வெறும் கண்துடைப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டுப்பிரசுரம் | Tnpf Boycott Of Presidential Elections In Trinco

அத்தோடு, 13ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்தோரே பொது வேட்பாளருக்கு பின்னால் நிற்கின்றனர் எனவும் ஒற்றை ஆட்சி முறை இல்லாமல் ஆக்கப்பட்டு சமஷ்டி ஆட்சியை கொண்டு வரும் வரை தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனவும் சிறீபிரசாந் கூறியுள்ளார்.

தேர்தல் தொடர்பில் 925 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பில் 925 முறைப்பாடுகள் பதிவு

வன்னியில் இலட்சக்கணக்கானோர் வாக்களிக்க தகுதி

வன்னியில் இலட்சக்கணக்கானோர் வாக்களிக்க தகுதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW