நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Sep 10, 2024 02:12 AM GMT
Rukshy

Rukshy

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

யாழில் சடலமாக மீட்கப்பட்ட சட்டத்தரணி

யாழில் சடலமாக மீட்கப்பட்ட சட்டத்தரணி

தற்காலிகமாக பலத்த காற்று

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி | Thunderstorms In Many Parts Of The Country

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

வெளிநாடொன்றில் பாரவூர்திகள் மோதி கோர விபத்து: 48 பேர் பலி

வெளிநாடொன்றில் பாரவூர்திகள் மோதி கோர விபத்து: 48 பேர் பலி

தேர்தல் பிரசார ஸ்டிக்கர்கள் தொடர்பில் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவு

தேர்தல் பிரசார ஸ்டிக்கர்கள் தொடர்பில் ஆணைக்குழு பிறப்பித்துள்ள உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW